முன்னாள் காதலனை கொலை செய்ய.. +2 மாணவி செய்த காரியம்!

 

முன்னாள் காதலனை கொலை செய்ய.. +2 மாணவி செய்த காரியம்!

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள பணக்குடி புஷ்பவனம் கிராமத்தில் வசித்து வரும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் விக்னேஷ், அவருடன் படித்து வந்த மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அந்த மாணவி திடீரென விக்னேஷை பிரிந்து வேறு ஒரு மாணவனை காதலித்துள்ளார். விக்னேஷுடனும் அவர் பேசவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் மாணவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை காட்டி அவரை மிரட்டியதோடு, வீட்டிலும் சொல்லிவிடுவேன் என கூறியுள்ளார்.

முன்னாள் காதலனை கொலை செய்ய.. +2 மாணவி செய்த காரியம்!

விக்னேஷ் மிரட்டியதால் அவரை கொலை செய்ய முடிவு செய்த அந்த மாணவி, கூலிப்படையினர் உதவியை நாடியுள்ளார். கூலிப்படையினர் சொன்னதன் படி, விக்னேஷை பெத்தானியா மலைப்பகுதிக்கு வரவழைத்த அந்த மாணவி கூலிப்படையை ஏவிவிட்டு கொலை செய்ய முயற்சிக்கிறார். வெடிகுண்டு, அரிவாள், கத்தி உள்ளிட்ட பொருட்களை காட்டி கூலிப்படையினர் விக்னேஷை மிரட்டியுள்ளனர்.

முன்னாள் காதலனை கொலை செய்ய.. +2 மாணவி செய்த காரியம்!

அங்கிருந்து தப்பிச் சென்ற விக்னேஷ் அப்பகுதி காவல் நிலையத்தில், மாணவி கூலிப்படையை ஏவி தன்னை கொலை செய்ய முயல்வதாக புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மலைப்பகுதியில் பதுங்கியிருந்த கூலிப்படையினர் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தப்பியோடிய மாணவி மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.