ஜூலை முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பின் பொதுத்தேர்வு முடிவுகள் – அமைச்சர் செங்கோட்டையன்

 

ஜூலை முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பின் பொதுத்தேர்வு முடிவுகள் – அமைச்சர் செங்கோட்டையன்

கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 15 ஆம் தேதி நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலர் கோரிக்கை விடுத்தனர். அதனால் அந்த பொதுத்தேர்வும், 11 ஆம் வகுப்புக்கான மீதமுள்ள தேர்வும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் ஆல்பாஸ் ஆக அறிவிக்கப்பட்டனர். இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பின் பொதுத்தேர்வு முடிவுகள் – அமைச்சர் செங்கோட்டையன்

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஜூலை முதல் வாரத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தலால் புத்தகம் அச்சடிக்கும் பணி தாமதமாகி இருப்பதாகவும் இம்மாத இறுதிக்குள் புத்தகங்கள் தயாரானதும் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் பல நாட்களாக திறக்கப்படாததால் மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கும் பணி நடக்கிறது என்றும் சூழ்நிலை பொறுத்து பருவத்தேர்வு ரத்து செய்யப்படும் தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயம் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.