செல்போன் பேசியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை!

 

செல்போன் பேசியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை!

நாமக்கல்

நாமக்கல் அருகே செல்போன் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவரது மகள் ஶ்ரீநிதி (17). இவர் பரமத்திவேலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்த மாணவி ஶ்ரீநிதி, செல்போனில் அடிக்கடி பேசி வந்தாராம்.

செல்போன் பேசியதை கண்டித்த பெற்றோர்… வேதனையில் பிளஸ் 2 மாணவி தற்கொலை!

இதனால், அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த ஶ்ரீநிதியை உறவினர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி ஶ்ரீநிதி உயிரிழந்தார். இதுகுறித்து, புகாரின் பேரில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.