சட்டவிரோதமாக கஞ்சா, மதுபாட்டில்களை விற்பனை செய்த 128 பேர் கைது

 

சட்டவிரோதமாக கஞ்சா, மதுபாட்டில்களை விற்பனை செய்த 128 பேர் கைது

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரகாலத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த 128 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர். தென்காசி மாவட்ட எஸ்.பி., சுகுணா சிங், பொதுமக்களை சீரழிக்கும் கஞ்சா, மது, குட்கா, புகையிலை பொருட்கள் ஆகியவற்றை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதனை விற்பனை செய்யும்

சட்டவிரோதமாக கஞ்சா, மதுபாட்டில்களை விற்பனை செய்த 128 பேர் கைது

நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்துவருகிறார். அதன் தொடர்ச்சியாக கடந்த ஒரு வார காலத்தில் 5 கஞ்சா வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 11 குற்றவாளிகளை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து 1.170 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதேபோன்று, சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக 117 வழக்குகள் பதிவுசெய்து, 117 நபர்களை கைதுசெய்த போலீசார், அவர்களிடமிருந்து ஆயிரத்து 91 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.