“மீசை வர்றதுக்கு முன்பே,ஆசை வந்துடுச்சே”-46 வயது பெண் கூட்டு பலாத்கார வழக்கில் 12 வயது சிறுவன்
ஒரு ஆசிரமத்தில் 46 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்
ஜார்கண்டின் கோடா மாவட்டத்தில் உள்ள ரணிதி என்ற ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பல ஆண் சாமியார்களும் ,பெண் சாமியார்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.அப்போது அந்த ஆசிரமத்திற்க்குள் நுழைந்த நான்கு பேர் அங்கிருந்த ஒரு 46 வயது பெண் சாமியாரை பலாத்காரம் செய்தனர் .இந்த வழக்கில் போலிசார் இரண்டு பேரை ஏற்கனவே கைது செய்துள்ளார்கள் .அவர்களும் தாங்கள் அந்த பெண் சாமியாரை பலாத்காரம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்கள் .இந்நிலையில் அதிரடி திருப்பமாக இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு 12 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது .
மேலும் அந்த சிறுவன் முதலில் அவர்கள் ஆசிரமத்திற்குள் நுழைய ஸ்கெட்ச் போட்டு கொடுத்தானென்றும் ,அந்த சிறுவன் அந்த பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டிக்கொண்டிருக்கும்போது, மற்றவர்கள் கற்பழித்துள்ளார்கள் .இதனால் அந்த சிறுவனை மூன்றாவது குற்றவாளியாக சேர்த்த போலீசார் ,இந்த வழக்கின் நாலாவது குற்றவாளியை தேடி வருகிறார்கக்ள் .குற்றம் நடந்த இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட டி.என்.ஏ மாதிரிகள் தடயவியல் பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.அந்த பலாத்காரம் சம்பவம் செவ்வாய் அதிகாலை 2.30 மணியளவில் நடந்தாகவும் ,அப்போது இன்னும் இரண்டு பெண் சாமியார்கள் ஒரு ஆண் சாமியார் இருந்ததாகவும் அவர்களை அடித்து ஒரு அறையில் பூட்டி விட்டு இந்த பலாத்காரம் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது