பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு!

 

பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சன்குளத்தில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அந்த ஆலையில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இன்று காலை வழக்கம் போல ஊழியர்கள் பணிக்கு திரும்பினர். பனியின் போது உராய்வின் காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு!

தகவல் அறிந்து வந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்பு வீரர்கள், வெடி விபத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஒரு சிலர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில் நாட்டு வெடிகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் தீயணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயம் அடைந்த 20 பேருக்கு சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.