12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு அதிரடி!

 

12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் மேலும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து இன்று மேலும் 12 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஐபிஎஸ் வருண்குமார் சென்னையிலுள்ள காவல் நவீனமய கணினி பிரிவு கண்காணிப்பாளராகவும் சென்னையில் உரிமைப் பிரிவு துணை ஆணையராக இருந்த திருநாவுக்கரசு சட்டம் ஒழுங்கு உதவி ஐஜியாகவும் தலைமையிட துணை ஆணையராக இருந்த விமலா சென்னை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு அதிரடி!

மேலும், சென்னையில் உரிமைப் பிரிவு துணை ஆணையராக இருந்த சுதாகர் உயர்நீதிமன்ற வழக்குகளை கண்காணிக்கும் பிரிவின் உதவி ஐ.ஜியாகவும், தர்மபுரி மாவட்ட எஸ்.பியாக இருந்த எஸ்.பிராஜன் சென்னை கோட்டம் ரயில்வே எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டு, அந்த பதவிக்கு பர்வேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மற்ற ஐபிஎஸ் அதிகாரிகளின் இடமாற்ற விவரங்கள் புகைப்படங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

12 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: தமிழக அரசு அதிரடி!