சென்னையில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – பெண் உட்பட 12 பேர் கைது

 

சென்னையில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – பெண் உட்பட 12 பேர் கைது

சென்னை

துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் சாக்லெட் பார்சல்களுக்குள் மறைத்து கடத்திவந்த 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – பெண் உட்பட 12 பேர் கைது

துபாயில் இருந்து இன்று அதிகாலை சென்னைக்கு வந்த சிறப்பு விமானத்தில் பயணித்தவர்களை, விமான நிலைய சுங்கத்துறையினா் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சோ்ந்த பத்மா பாலாஜி (25) என்ற இளம் பெண் உட்பட ராமநாதபுரம், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களை சேர்ந்த 12 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவா்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – பெண் உட்பட 12 பேர் கைது

அப்போது அவர்கள் கொண்டுவந்திருந்த சாக்லட் பாக்கெட்கள், உள்ளாடைகள், முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்குகள் மற்றும் காலணிகள் ஆகியவற்றில் தங்க பேஸ்ட்கள், தங்கக்கட்டிகள், தங்கத்துண்டுகள் மற்றும் தங்க நகைகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். தொடர்ந்து, 12 பேரிடமிருந்தும் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான 3 கிலோ 750 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அவர்களை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.