12 வயது சிறுமி தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை!

 

12 வயது சிறுமி தற்கொலை; போலீசார் தீவிர விசாரணை!

கடந்த 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் இந்தியாவில் மட்டும் 37 சதவீத பெண்களும், 24 சதவீத ஆண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

மும்பை: மும்பையில் 12 வயது சிறுமி தனது துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நாக்படாவை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை தனது உடன் பிறந்தவர்களுடன் இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த அச்சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் விளையாட சென்று விட்டனர். இந்த நிலையில், அவரது வீட்டுக்கு வந்த உறவினர் கதவு பூட்டப்பட்டிருப்பதை கண்டு நெடு நேரமாக தட்டியுள்ளார்.

கதனை யாரும் திறக்காத நிலையில், சந்தேகம் அடைந்த அவர், அருகில் உள்ள சிறுமியின் தந்தையின் கடைக்கு சென்று விவரத்தை சொல்லியுள்ளார். இதையடுத்து, விரைந்து வீட்டுக்கு வந்த அவர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது. சுவற்றில் மாட்டப்பட்டிருந்த பாத்திரம் வைக்கும் ரேக்கில் தனது துப்பாட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமியை கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கடந்த 2016-ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் இந்தியாவில் மட்டும் 37 சதவீத பெண்களும், 24 சதவீத ஆண்களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதில் 63 சதவீத தற்கொலை வழக்குகள் 15-39 வயதுக்குள் பதிவாகியுள்ளது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க

கட்சி அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை; இளைஞர் கைது!