பிளஸ் 1 மாணவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை!

 

பிளஸ் 1 மாணவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை!

திருச்சி

திருச்சியில் எலி மருந்து சாப்பிட்டு பிளஸ் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவர் டீக்கடையில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் ஜனார்த்தனன் (16). இவர் தெப்பகுளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜனார்த்தனனுக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது.

பிளஸ் 1 மாணவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை!

இதனால், அவரது பெற்றோர், அரியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊசி போட்டுள்ளனர். ஆனால், வாந்தி நிற்காததால், அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு ஜனார்த்தனனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் எலி மருந்து சாப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஜனார்த்தனனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.