மகாராஷ்டிரா காவல்துறையில் புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

 

மகாராஷ்டிரா காவல்துறையில் புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிரா காவல்துறையில் புதிதாக 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா காவல்துறையில் கடந்த 24 மணி நேரத்தில் 114 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,330 பேருக்கு கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளனர். இதுவரை அம்மாநில காவல்துறையில் 26 பேர் கொரோனா வைரஸால் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் இறந்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில காவல்துறையில் இதுவரை 2,095 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் 55-க்கும் மேற்பட்ட மும்பை போலீசார் வீட்டிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதாவது காவல்துறையில் 52 வயதிற்கு மேற்பட்டவர்கள், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதுபோல வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.