கோவையில் ஆபாச காட்சிக்களை வலுக்கட்டாயமாக சிறுமியை பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை

 

கோவையில் ஆபாச காட்சிக்களை வலுக்கட்டாயமாக சிறுமியை பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை

கோவையில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

சுந்தராபுரம் பகுதியில் தாயை இழந்த 11 வயது சிறுமி தந்தை மற்றும் அத்தையின் அரவணைப்பில் வசித்து வருகிறார். தந்தையும் அத்தையும் கூலி வேலைக்குச் செல்லும் நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமி, கீழ் வீட்டில் டி.வி பார்க்கச் செல்வது வழக்கமாக கொண்டுளார். இந்நிலையில், கடந்த மே 20ஆம் தேதி டி.வி பார்க்க வந்த சிறுமியை அவ்வீட்டில் இருந்த 10 ஆம் வகுப்பு சிறுவனும் அவருடன் சேர்ந்து இரு சிறுவர்களும் சிறுமியை கட்டாயப்படுத்தி ஆபாசக் காட்சிகளைப் பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை அரசு மருத்துவமனைக்கு தந்தையும், அத்தையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

கோவையில் ஆபாச காட்சிக்களை வலுக்கட்டாயமாக சிறுமியை பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை

அவரைப் பரிசோதித்தபோது சிறுமி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாயிருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து இது குறித்து மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்தபோது , சிறுமி நடந்த சம்பவங்களைத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சிறுமியிடம் புகார் பெற்ற கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் 3 பள்ளி மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஆன்லைன் வகுப்பிற்காக வாங்கிக்கொடுத்த ஸ்மார்ட் போன்களில் ஆபாச படங்களை பார்த்து, சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.