11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

 

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

தர்மபுரி அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை  போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!

இந்த நிலையில், தர்மபுரி எம். ஜி.ஆர் நகரைச் சேர்ந்த வேலுவின் மகன் பெரியசாமி, சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் தந்திரமாக பேசி மறைவான இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர, உடனடியாக தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார்,  பெரியசாமியை போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது!