திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிவைத்த 11 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 6 பேர் கைது!

 

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிவைத்த 11 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 6 பேர் கைது!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 11 ஆயிரம் போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் அடுத்துள்ள அனுமந்தராயன்கோட்டை அருகே அரசு அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதாக மாவட்ட எஸ்.பி சீனிவாசனுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரி, தனிப்படை போலீசார் அனுமந்தராயன் கோட்டை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சுமார் 180 மில்லி லிட்டர் அளவுகொண்ட 11 ஆயிரத்து 136 போலி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிவைத்த 11 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 6 பேர் கைது!

இவற்றை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தொடர்பாக, அனுமந்தராயன் கோட்டையை சேர்ந்த இன்பராஜ் உள்ளிட்ட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்கள் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர். அங்கு, அவர்கள் மீது திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பகுதியை திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. சீனிவாசன் நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.