என்.எல்.சியில் பாய்லர் வெடித்து விபத்து: மேலும் ஒரு ஊழியர் மரணம்; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

 

என்.எல்.சியில் பாய்லர் வெடித்து விபத்து: மேலும் ஒரு ஊழியர் மரணம்; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி அனல்மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 1 ஆம் தேதி வழக்கம் போல ஊழியர்கள் பணிக்குத் திரும்பிய நிலையில், திடீரென 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், நிகழ்விடத்திலேயே 6 பணியாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 17 பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

என்.எல்.சியில் பாய்லர் வெடித்து விபத்து: மேலும் ஒரு ஊழியர் மரணம்; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

அவர்களில் சிவகுமார் என்ற பொறியாளர் கடந்த 3 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மேலும் செல்வராஜ் என்ற ஒப்பந்தத் தொழிலாளியும், ரவிச்சந்திரன் என்ற பொறியாளரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்தது. அதனைத்தொடர்ந்து இன்று காலை நிரந்தர ஊழியர் வைத்தியநாதன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு ஊழியர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.