அதிர்ச்சி அளிக்கும் பிங்க் அறிக்கை; தேவை 11 ஆயிரம் கோடி -ஒதுக்கப்பட்டது வெறும் 95 கோடி; சு.வெங்கடேன் எம்.பியின் கண்டனம்

 

அதிர்ச்சி அளிக்கும் பிங்க் அறிக்கை; தேவை 11 ஆயிரம் கோடி -ஒதுக்கப்பட்டது வெறும் 95 கோடி; சு.வெங்கடேன் எம்.பியின் கண்டனம்

தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி தேவை. ஆனால், ஒதுக்கப்பட்டுள்ளதோ வெறும் 95 கோடி மட்டுமே. இன்று வெளியிடப்படுள்ள பிங்க் அறிக்கையில் உள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. அதற்கு எனது வன்மையான கண்டனங்கள் என்று தெரிவித்துள்ளார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன். போதிய நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார் அவர்.

அதிர்ச்சி அளிக்கும் பிங்க் அறிக்கை; தேவை 11 ஆயிரம் கோடி -ஒதுக்கப்பட்டது வெறும் 95 கோடி; சு.வெங்கடேன் எம்.பியின் கண்டனம்

இதுகுறித்த அவரது அறிக்கையில், ‘’மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து ரயில்வேயின் வளர்ச்சி திட்டங்களுக்கான பிங்க் புக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் தமிழகத்தில் 11 புதிய ரயில் திட்டங்களுக்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் போது வெறும் 95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் 208 கோடி தேவைப்படுகிற ராமேஸ்வரம் தனுஷ்கோடி திட்டத்திற்கு 75 கோடியும், மதுரை -அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய பாதை திட்டத்தின் ஆயிரத்து 800 கோடிக்கு வெறும் 20 கோடியும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது’’என்றும்,

’’திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை, திண்டிவனம் -நகரி, அத்திப்பட்டு -புத்தூர், ஈரோடு- பழனி, சென்னை -மகாபலிபுரம்- கடலூர், கூடுவாஞ்சேரி -திருப்பெரும்புதூர், மொரப்பூர்- தர்மபுரி, காரைக்கால் – பேரளம், சின்னசேலம்- கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை ஆகிய திட்டங்களுக்கு தேவைப்படுகின்ற பத்தாயிரம் கோடிக்கு ஒவ்வொரு திட்டத்திற்கும் தலா வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது சென்ற ஆண்டு இதே போல புதிய திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கியது.

அதிர்ச்சி அளிக்கும் பிங்க் அறிக்கை; தேவை 11 ஆயிரம் கோடி -ஒதுக்கப்பட்டது வெறும் 95 கோடி; சு.வெங்கடேன் எம்.பியின் கண்டனம்

நான் அதனை வன்மையாக கண்டிக்கிறேன் . அது தொடர்பாக ரயில்வே வாரிய தலைவரை சந்தித்தேன். ஆனாலும் இந்த ஆண்டும் வெறும் ஆயிரம் ரூபாயை ஒதுக்கி இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது’’என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘’ தமிழக வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இதைப்போல மதுரை -வாஞ்சி மணியாச்சி -தூத்துக்குடி மின் மையத்துடன் கூடிய இரட்டை பாதை திட்டம் வாஞ்சி மணியாச்சி இல் இருந்து நாகர்கோவில் -திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கு சென்று மூன்று திட்டங்களுக்கும் மீதி 3000 கோடி தேவைப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் வெறும் 275 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் 2017இல் அறிவித்தபோது 2021 முடியும் என்று மத்திய அமைச்சரவை கூறியது. ஆனால் இப்போதைய நிலைமையில் 2025 இல் கூட இந்தத் திட்டம் முடிவடையாத நிலையில் இருக்கிறது.

மத்திய பட்ஜெட் தமிழகத்தில் ரயில் வளர்ச்சித் திட்டங்களை தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகவும் வன்மையான கண்டனத்திற்கு உரியது. மத்திய அரசு மறுபரிசீலனை செய்து இந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த திட்டங்களுக்கான போதிய நிதியை ஒதுக்க வேண்டும்’’ என்றும் வலியுறுத்தியுள்ளார்.