சினேகனுக்கு ரூ.10 கோடி விலைபேசிய கட்சி எது?

 

சினேகனுக்கு ரூ.10 கோடி விலைபேசிய கட்சி எது?

அதிமுகவின் பேச்சாளராக இருந்த கவிஞர் சினேகன், மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து முக்கிய பொறுப்பு வகித்து வருகிறார்.

சினேகனுக்கு ரூ.10 கோடி விலைபேசிய கட்சி எது?

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அவர் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, விருகம்பாக்கம் தொகுதியின் வெற்றி வேட்பாளர் கவிஞர் சினேகன். துடிப்பான இளைஞர். விருகம்பாக்கம் மக்களுக்கு ஐந்தாண்டுகள் உழைக்க ஆர்வத்தோடும் சிறப்பான திட்டங்களோடும் காத்திருக்கிறார். அவரை வெற்றி பெறச் செய்யுங்கள். இம்முறை வெல்வது தமிழகமாக இருக்கட்டும் என்று கமல்ஹாசன் சினேகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

சினேகனுக்கு ரூ.10 கோடி விலைபேசிய கட்சி எது?

வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் சினேகனை செய்தியாளர்கள் சந்தித்தபோது, ‘’விருகம்பாக்கம் தொகுதியில் நான் போட்டியிடாமல் இருப்பதற்காக 10 கோடி ரூபாய் எனக்கு விலை பேசினார்கள். ஆனால், பணம் எனக்கு முக்கியமில்லை. கொள்கைதான் முக்கியம் என்று விலை பேசியவர்களை தெறிக்கவிட்டுட்டேன்’’ என்றார்.

விருகம்பாக்கம் தொகுதியில் தேமுதிகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கிறது. ஆனால், எந்த கட்சி தன்னை விலைபேசியது என்று கடைசிவரைக்கும் அவர் சொல்லவே இல்லை.