10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு?!

 

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு?!

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கு என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதே போல பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இன்று முதல் ஆசிரியர்கள் இன்று முதல் பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு?!

இதனிடையே கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதால் தேர்வை ஒத்திவைக்குமாறு பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே போல, ஆசிரியர்கள் சங்கமும் தேர்வை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்தது. அதனால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைப்பது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை ,மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூலை 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.