டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

 

டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

வேலூர்

வேலூர் அருகே டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் நேரு நகரை சேர்ந்தவர் ஜீவா. கூலி தொழிலாளி. இவரது மகள் உமா மகேஸ்வரி (16). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரேனா ஊரடங்கு காரணமாக பள்ளி திறக்காத நிலையில், வீட்டில் இருந்து வந்த உமா மகேஸ்வரி, அடிக்கடி தொலைக்காட்சி பார்த்து வந்துள்ளார். இதனால் படிப்பில் சரிவர கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை!

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் டிவி பார்த்து கொண்டிருந்த உமா மகேஸ்வரியை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர், வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேலூர் தாலுகா போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இந்த சம்பம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.