10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தாயார் உள்பட இருவர் போக்சோவில் கைது!

 

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தாயார் உள்பட இருவர் போக்சோவில் கைது!

திண்டுக்கல

திண்டுக்கல்லில் 10 ஆம் வகுப்பு மாணவி பாலிய வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மாணவியின் தாயார் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் செல்வி (46). இவருக்கு 10ஆம் வகுப்பு படித்து வரும் பெண் உள்பட 2 மகள்கள் உள்ளனர். கருத்துவேறு காரணமாக கணவரை பிரிந்த செல்வி, தனது மகள்களுடன் தனியே வசித்து வந்துள்ளார். மேலும், வேடச்சந்தூரில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.

அப்போது, செல்விக்கு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் வடமதுரையை சேர்ந்த சிவகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் செல்வியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வியின் இளைய மகளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… தாயார் உள்பட இருவர் போக்சோவில் கைது!

இதனை அடுத்து, அவரை மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வதாக கூறி அழைத்துச் சென்ற சிவகுமார், மாறாக வடமதுரையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தனது வீட்டிற்கு வந்த சிறுமி இதுகுறித்து தாயார் செல்வியிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இதனை சொல்லக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் மாணவி இதுகுறித்து தனது உறவினர்களிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமார் மற்றும் சிறுமியின் தாயார் செல்வியை கைதுசெய்தனர்.