10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை… இளைஞர் போக்சோவில் கைது!

 

10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை… இளைஞர் போக்சோவில் கைது!

கோவை

கோவை கிணத்துக்கடவில் 10ஆம் வகுப்பு மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி வீட்டில் இருந்து மாயமாகினார். இதுகுறித்து அவரது பெற்றோர் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அதன் பேரில் போலீசார் மாணவியை தேடி வந்தனர். இதனிடையே, மாணவியை மீட்கக் கோரி அவரது உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

10ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை… இளைஞர் போக்சோவில் கைது!

தொடர்ந்து, மாயமான மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, அவர் கர்நாடக மாநிலம் மங்களூருவில் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை மீட்டு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, சுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். மேலும், மீட்கப்பட்ட மாணவியை கோவையில் உள்ள தனியார் காப்பத்தில் ஒப்படைத்தனர்.