10ஆம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் தேவை : ஓபிஎஸ் கோரிக்கை!

 

10ஆம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் தேவை : ஓபிஎஸ் கோரிக்கை!

பத்தாம் வகுப்பு சான்றிதழ்களில் ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி மதிப்பெண்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

10ஆம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் தேவை : ஓபிஎஸ் கோரிக்கை!

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓபிஎஸ், “பதினொன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, நீட் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி என்ற வரிசையில் தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட மாட்டாது என்றும் தேர்ச்சி என்ற மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆட்சியில் கொரோனா தாக்கம் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்பட சூழ்நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 விழுக்காடு மதிப்பெண்களும், வருகை பதிவின் அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்கள் வழங்க உத்தரவிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

10ஆம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் தேவை : ஓபிஎஸ் கோரிக்கை!

நடப்பாண்டில் பன்னிரண்டாம் வகுப்பு வகுப்பிற்கான சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட சூழ்நிலையில் அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்குவதற்காக உயர்மட்ட குழு ஒன்றை மத்திய அரசு அமைத்து, பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30 விழுக்காடு ,மதிப்பெண்களும் பதினோராம் வகுப்பு இறுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 30 விழுக்காடு மதிப்பெண்களும் ,பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 40 விழுக்காடு மதிப்பெண்கள் வழங்கப் போவதாக செய்திகள் வெளிவருகின்றன.

இதேபோல் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பொருத்தவரை உள் மதிப்பீட்டிற்கு 20 விழுக்காடு மதிப்பெண், பொதுத் தேர்வுக்கு முன் நடைபெற்ற தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு 80 விழுக்காடு மதிப்பெண் அளித்து அதன் அடிப்படையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

10ஆம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண் தேவை : ஓபிஎஸ் கோரிக்கை!

நடப்பாண்டில் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் சூழ்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும் தேர்ச்சி என்று மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என்றும் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். எந்த மதிப்பின் அடிப்படையில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அல்லது எந்த மதிப்பின் அடிப்படையில் பாலிடெக்னிக் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அந்த அடிப்படையிலாவது பத்தாம் வகுப்பிற்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.

ஏனென்றால் முக்கியத்துவம் வாய்ந்த பத்தாம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமலிருப்பது எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களின் மனங்களில் நிலவுதான் . எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்புடைய அனைவரையும் கலந்தாலோசித்து ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி பத்தாம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம் பெற வழிவகை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.