தர்மபுரி:10 பைசா பிரியாணியை வாங்க, திரண்ட அசைவ பிரியர்கள்

 

தர்மபுரி:10 பைசா பிரியாணியை வாங்க, திரண்ட அசைவ பிரியர்கள்

தர்மபுரியில் 10 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட பிரியாணியை வாங்க கடைமுன்பு நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை சேர்ந்த பாலாஜி என்பவர், இண்டூரில் புதிதாக திறந்துள்ள தனது உணவகத்தை விளம்பரப்படுத்தும் விதமாக 10 பைசா நாணயம் கொண்டு வருபவர்களுக்கு பிரியாணி வழங்குவதாக அறிவிப்பு செய்திருந்தார்.

தர்மபுரி:10 பைசா பிரியாணியை வாங்க, திரண்ட அசைவ பிரியர்கள்

இதனையறிந்த அசைவ பிரியர்கள் ஏராளமானோர் கொரோனா அச்சத்தையும் மறந்து அதிகாலை முதலே 10 பைசா நாணயங்களுடன் உணவகம் முன்பு திரண்டிருந்தனர்.

தர்மபுரி:10 பைசா பிரியாணியை வாங்க, திரண்ட அசைவ பிரியர்கள்

இதனால் கூட்டநெரிசல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக அங்கு கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் வரிசையில் காத்திருந்து பிரியாணி பொட்டலங்களை வாங்கி சுவைத்துச் சென்றனர். இதனால், கடையை திறந்த சில மணி நேரங்களிலேயே 250-க்கும் அதிகமான பிரியாணிகள் விற்று தீர்ந்தது.

தர்மபுரி:10 பைசா பிரியாணியை வாங்க, திரண்ட அசைவ பிரியர்கள்