108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்- மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம். 31 ஆம் தேதி நடக்கிறது!

 

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்- மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம். 31 ஆம் தேதி நடக்கிறது!


ஈரோடு ஆக 28 –
108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பணிக்கு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்ற, 25 முதல், 35 வயதுக்கு உட்பட்ட, 162.5 செ.மீ.,க்கு குறையாத உயரமுள்ள, இலகு ரக வாகன ஓட்டுனர் உரிமம், பேட்ஜ் வாகன உரிமம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். மாதம், 13,200 ரூபாய் ஊதியமாகும்
மருத்துவ உதவியாளர் பணிக்கு, பி.எஸ்.சி., நர்சிங், ஜி.என்.எம்., – ஏ.என்.எம்., – டி.பார்ம், டி.எம்.எல்.டி., – பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோகெமிஸ்டிரி, மைக்ரோ பயாலஜி, தாவர உயிரியல் படித்த, 20 முதல், 30 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மாதம், 13,760 ரூபாய் ஊதியம் வழங்கப்படும்.

108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள்- மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம். 31 ஆம் தேதி நடக்கிறது!


பங்கேற்க விரும்புவோர், 9154250614, 9154251383 என்ற எண்ணில் காலை, 10 மணி முதல் மாலை, 5 மணி வரை எஸ்.எம்.எஸ்., மூலம் தங்கள் பெயர், வயது, பாலினம், உயரம், கல்வி தகுதி, அனுபவம், மாவட்டம், தொடர்பு எண் போன்ற விபரங்களை அனுப்பி வைக்க வேண்டும். வேலைவாய்ப்பு முகாம் வரும் 31-ஆம் தேதி ஈரோடு தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற உள்ளது- ரமேஷ் கந்தசாமி