1952-2021: அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது முதியவர்!

 

1952-2021: அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது முதியவர்!

கோவை கருப்பராயன்பாளையத்தை சேர்ந்த 105 வயதான முதியவர் மாரப்பன். இவர் 1952 முதல் 2021 வரை நடைபெற்ற அனைத்து சட்டமன்ற தேர்தல்களிலும் தவறாது வாக்களித்துள்ளார்.

1952-2021: அனைத்து சட்டப்பேரவை தேர்தல்களிலும் வாக்களித்த 105 வயது முதியவர்!

1916 ஆம் ஆண்டு ஜீன் மாதம் 1 ஆம் தேதி பிறந்த மாரப்பனுக்கு தற்போது அவரது வயது 105. விவசாயியான இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். காந்தியடிகள், காமராஜர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை பார்த்த மாரப்பன், மக்களுக்கு நல்லது செய்வோரை கண்டறிந்து வாக்களிக்க வேண்டுமென இன்றைய இளைஞர்களுக்கு வாக்களித்துள்ளார். 105 வயது ஆன போதும் தள்ளாத வயதிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு ஜனநாயக கடமை ஆற்றியுள்ளார் மாரப்பன்.

வாக்களிப்பதிலும், வயதிலும் சீனியரான மாரப்பனின் காலில் விழுந்து தேர்தல் நடத்தும் அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் ஆசி பெற்றனர்.