தொடர்ந்து 100 அடியிலேயே இருக்கும் பவானிசாகர் அணை
Sep 16, 2020, 18:19 IST1600260552000
ஈரோடு , திருப்பூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாய விளை நிலங்களின் ஆதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை . 105 கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணை இரண்டாவது முறையாக 100 அடியை எட்டியது பின்னர் மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது . இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 100. 15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,649 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 650 கனஅடியும் கீழ் பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடி என மொத்தம் 2, 950 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.