ஒரே நாளில் 100 பேர் மரணம் : கொரோனா பாதிப்பு விவரம் இதோ!

 

ஒரே நாளில் 100 பேர் மரணம் : கொரோனா பாதிப்பு விவரம் இதோ!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 100 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 11,610 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,09,37,320 ஆக அதிகரித்துள்ளதாகவும் 100 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,55,913 ஆக அதிகரித்துள்ளதாகவும் தற்போது 1,36,549 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை 89,99,230 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஒரே நாளில் 100 பேர் மரணம் : கொரோனா பாதிப்பு விவரம் இதோ!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும், பாதிப்பு முற்றிலுமாக ஓயவில்லை. அதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதே போல, மக்கள் தயக்கம் காட்டாமல் கொரோனா வைரஸ் தடுப்பூசியும் போட்டுக் கொள்ள வேண்டுமெனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. கொரோனா மரணங்கள் குறைந்திருந்தாலும் நாளொன்றுக்கு பாதிப்புகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் அதிகமாகவே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.