100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு ; தினசரி ஊதியம் ரூ.300 ஆக அதிகரிப்பு!

 

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு ; தினசரி ஊதியம் ரூ.300 ஆக அதிகரிப்பு!

சட்டப்பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் சில முக்கிய அறிவிப்புகள் இதோ!

*ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ஜல்ஜீவன் இயக்கம் செயல்படுத்தப்படும்.

*சென்னை பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக மாற்றப்படும்.

*சீர்மிகு நகர திட்டத்திற்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு; அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடி ஒதுக்கீடு.

*கிருஷ்ணா நதிநீரை சென்னை நீர் தேக்கங்களுக்கு குழாய் மூலம் கொண்டு வர சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்.

*சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு ; தினசரி ஊதியம் ரூ.300 ஆக அதிகரிப்பு!

*நமக்கு நாமே திட்டத்தில் சிறப்பான பங்களிப்பவர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்.

*100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு; தினசரி ஊதியம் 273 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக உயர்வு.

*மண் சாலைகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும்; நகரங்களில் 30 மீட்டர் இடைவெளியிட்டு தெருவிளக்குகள் அமைக்கப்படும், நீர்நிலைகளை மீட்டெடுக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு.

*திருச்சியில் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் ஏற்படுத்தப்படும்.

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்வு ; தினசரி ஊதியம் ரூ.300 ஆக அதிகரிப்பு!

*குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3,954 கோடி நிதி ஒதுக்கீடு; குடிசைகள் இல்லாத தமிழ்நாட்டை அமைப்பதில் அரசு உறுதி
*நகர்ப்புற ஏழைகளுக்காக நகர்ப்புற ஊதிய வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்படும்

*CMDA போன்று மதுரை, கோவை, திருப்பூர், ஓசூரிலும் நிறுவப்படும்; தமிழ்நாடு வீட்டு வசதித்துறை, உலக வங்கியின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்படும்.

*பொது சொத்து பராமரிப்பு பணிக்காக வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

*கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகால் அமைக்க ரூ.80 கோடி ஒதுக்கீடு.