100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

 

100 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த 20 வயது இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

மேற்கு வங்கம்: 100 வயது பாட்டியை 20 வயது  இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் வசித்து வரும்  100 வயது பாட்டியை  கடந்த  அக்டோபர் 22 ஆம் தேதி இரவு  அர்கா பிஸ்வாஸ் அபியாஜித் என்ற 20 வயது இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இந்தச் சம்பவம் குறித்து அந்த பாட்டியின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, குற்றம் சட்டப்பட்டவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனர்.

rape

இதுகுறித்து கூறியுள்ள போலீசார், ‘பாதிக்கப்பட்ட 100 வயதுடைய பெண்மணியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி கங்க்பிரசாத் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டார் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.