10 வயதான சிறுமி -ஏழு சிறுவர்கள் –மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் நடந்த நாச வேலை.

 

10 வயதான சிறுமி -ஏழு சிறுவர்கள் –மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் நடந்த நாச வேலை.

10 வயதான சிறுமியை ஏழு சிறுவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ வைரலானதால் போலீசார் அந்த சிறுவர்களை கைது செய்தனர் .

10 வயதான சிறுமி -ஏழு சிறுவர்கள் –மூடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் நடந்த நாச வேலை.

ஹரியானாவின் ரேவாரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி கொரானா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்தது .இந்த நேரத்தில் மே 24ம் தேதி அந்த பள்ளியில் படிக்கும் 10 வயது முதல் 12 வயதான ஏழு சிறுவர்கள் அந்த பள்ளிக்கு வந்தனர் .

அப்போது அந்த பள்ளியில் 10 வயதான மாணவியொருவர் படித்து கொண்டிருந்தார் .அப்போது அந்த ஏழு மாணவர்களும் அந்த சிறுமியை பலவந்தமாக அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் தள்ளி பூட்டி வைத்தனர் .பின்னர் ஒவ்வொரு மாணவராக அந்த வகுப்பறைக்குள் சென்று அந்த மாணவியை கதற கதற கற்பழித்தனர் .அப்போது அந்த மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தை ஒரு மாணவர் தன்னுடைய செல்போனில் படம் பிடித்தார் .அதன் பிறகு  அந்த மாணவர்கள் அங்கேயே அந்த மாணவியை ரத்த வெள்ளத்தில் தவிக்க விட்டு ஓடி விட்டனர் .பின்னர் அந்த மாணவர்களில் ஒருவர் அந்த கற்பழிப்பு விடியோவை சமுக ஊடகத்தில்  வெளியிட்டார் .இந்த வீடியோ அந்த பகுதியில் வைரலானது .

அந்த வீடியோவை பார்த்த  அந்த பெண்ணின் பக்கத்து வீட்டு நபர் இது  பற்றி அந்த பெண்ணின் வீட்டில் புகார் கொடுத்ததும் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது .இதன் பின்னர் அவர்கள் அங்குள்ள  காவல் நிலையத்தில் அந்த மாணவர்கள் மீது புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த  மாணவர்களை கைது செய்து  விசாரித்தனர் .பிறகு அந்த குற்றவாளிகள் சிறார் நீதி வாரியம் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு  அனுப்பப்பட்டனர்.