அடுத்தவனோடு அலங்கோலமாக இருந்த தாய் -பார்த்த மகனுக்கு நேர்ந்த கொடுமை

 

அடுத்தவனோடு அலங்கோலமாக இருந்த தாய் -பார்த்த மகனுக்கு நேர்ந்த கொடுமை


காதலியோடு உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்ட, காதலியின் பத்து வயது மகனை கொலை செய்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டார்

அடுத்தவனோடு அலங்கோலமாக இருந்த தாய் -பார்த்த மகனுக்கு நேர்ந்த கொடுமை


பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் பாருராஜ் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள லக்ஷ்மினியா கிராமத்தைச் சேர்ந்த நீரஜ் குமார் என்ற 10 வயது சிறுவன் தனது 45 வயதான தாயுடன் வசித்து வந்தார் .இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அதே பகுதியில் வசிக்கும் பண்டிட் என்ற 30 வயதான நபருடன் கள்ள உறவு ஏற்பட்டது .அதனால் இருவரும் அவரின் 10 வயதான மகனுக்கு தெரியாமல் உல்லாசமாக இருந்து வந்தனர் .இதற்கிடையே கடந்த வாரம் அந்த சிறுவன் வெளியே விளையாட போயிருந்தான் .அப்போது அந்த வீட்டினுள் அந்த பண்டிட்டும் அவரின் காதலியும் உல்லாசமாக இருந்தார்கள் அந்த நேரம் வீட்டினுள் வந்த அந்த சிறுவன் நீரஜ் அந்த காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்தான் .பிறகு அந்த காதலனை திட்டியுள்ளான் .அதனால் அந்த தாயின் காதலன் பண்டிட் அந்த சிறுவனை அடித்து உதைத்து ,பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரை கொலை செய்து விட்டான் .பின்னர் உடலை கிராமத்தின் புறநகரில் உள்ள ஒரு கால்வாயில் ஒதுக்குப்புறமான இடத்தில் வீசிவிட்டார் .
மறுநாள் அந்த தாய், மகனை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு அந்த சிறுவனின் பிணத்தை மீட்டனர் .பின்னர் அவரை கொலை செய்த வழக்கில் அந்த பண்டிட்டை கைது செய்தனர் .அதன் பிறகு இந்த கொலையில் அந்த தாய்க்கும் தொடர்பிருக்கிறதா என்று விசாரித்து வருகின்றனர் .