பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு 10 முட்டை: தமிழக அரசு அறிவிப்பு

 

பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு 10 முட்டை: தமிழக அரசு அறிவிப்பு

பள்ளிகள் திறக்கும் வரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் 10 முட்டை வழங்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை என அரசு தெரிவித்து விட்டது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தின் முட்டை , நாப்கின் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு முறையாக அளிக்க தமிழக அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டது.

பள்ளி திறக்கும் வரை மாணவர்களுக்கு 10 முட்டை: தமிழக அரசு அறிவிப்பு

அதாவது, பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களான அரிசி, பருப்பு தரப்படும் என்றும் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் சத்துணவுத் திட்ட மாணவர்களுக்கு இவை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதந்தோறும் 10 முட்டைகளையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தொடக்கப்பள்ளி, உயர் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அரசி பருப்புடன் சேர்த்து முட்டையும் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.