காவலர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு… காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு!

 

காவலர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு… காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்படும் போலீசாரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதுவரை 320 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவலர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு… காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு!

இந்நிலையில் சட்டம்- ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து போலீசாருக்கு சுழற்சி முறையில் 10 நாட்களுக்கு ஓய்வு அளிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

காவலர்களுக்கு 10 நாட்கள் ஓய்வு… காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு!

ஏற்கனவே 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமலிருக்க, அவர்களுக்கு ஓய்வு அல்லது வேறு பணி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காவல் நிலையத்தில் பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கு 10 நாட்கள் விடுப்பு அளிக்கவேண்டும் என்றும் அனைத்து காவலர்களும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் அவர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.