10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றும் ‘கோலங்கள்’ சீரியல் நடிகை

 

10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றும் ‘கோலங்கள்’ சீரியல் நடிகை

நடிகை சந்திரா லக்ஷ்மன் தமிழில் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி போன்ற படங்களிலும். கோலங்கள், காதலிக்க நேரமில்லை, சொந்தபந்தம் போன்ற தொடர்களிலும் நடித்தவர். இவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இருந்து விலகி இருந்தார்.

நடிகை சந்திரா லக்ஷ்மன் தமிழில் மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், தில்லாலங்கடி போன்ற படங்களிலும். கோலங்கள், காதலிக்க நேரமில்லை, சொந்தபந்தம் போன்ற தொடர்களிலும் நடித்தவர். இவர் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இருந்து விலகி இருந்தார்.

chandra-lakshman-90

தற்போது சந்திரா லக்ஷ்மன் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் “ஹாய் மக்களே! எனது புதிய படம் கோஸ்ட் ரைட்டர் இன்றிலிருந்து தொடங்குகிறது. சினிமா ரசித்து நேசித்து செய்யும் குழு இது. இதற்கு முன் நான் நடித்திராத கதாபாத்திரம் இது… எனவே மிகவும் ஆர்வமாக உள்ளேன்… தோடுபுழாவில் படப்பிடிப்பு இருப்பதால் எனக்கு மிக்க மகிழ்ச்சி, அங்கு எனக்கு பிடித்த படங்களான த்ரிஷ்யம், கதா பைன்போல் மற்றும் பல படப்பிடிப்புகளுக்கும் சென்றிருக்கிறேன்.” 

chandra-lakshman-876

மேலும் “கேரளாவின் ஹாலிவுட் என்று அழைக்கப்படும் இது காதலர்களுக்கு ஒரு அழகான இடம். இத்தனை வருடங்கள் கழித்து, மீண்டும் நடிக்க வந்திருக்கும் போது எல்லோரும் மிகவும் எதிர்பார்க்கிறார்கள்… இதற்காக எனது ரசிகர்கள் அனைவருக்கும்  நன்றி” என்று பதிவிட்டிருந்தார்.