10 வயது சிறுமியை 35 வயது வாலிபருக்கு ரூ. 50,000க்கு விற்ற பெற்றோர்கள்!

 

10 வயது சிறுமியை 35 வயது வாலிபருக்கு ரூ. 50,000க்கு விற்ற பெற்றோர்கள்!

குஜராத் மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் திருமணத்துக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு இறுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலத்தில் 10 வயது சிறுமி ஒருவர் திருமணத்துக்காக ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டு இறுதியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பனஸ்கந்தாவைச் சேர்ந்த சிறுமியான அசர்வாவை, 35 வயது வாலிபரான கோவிந்த் திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தை திருமணம் அரங்கேறியிருப்பதாகவும் காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்த சிறுமி ரூ.50 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது அம்பலமானது. அந்த சிறுமியை கோவிந்த்திடமிருந்து மீட்ட காவல்துறையினர் விசாரணையை தீவிரபடுத்தினர். அப்போது  சிறுமியை திருமணம் செய்தவர் அவரது தந்தையைவிட வயது மூத்தவர் என்றும், திருமணம் செய்துவைத்தது சிறுமியின் பெற்றோர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

Child marriage

முதலில் அந்த சிறுமிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை தவணை முறையாக கொடுக்க கோவிந்த் ஒப்பந்தம் செய்துகொண்டு திருமணம் செய்துள்ளார். முதல் கட்டமாக ரூ. 50 ஆயிரமும் கொடுத்துள்ளார். சிறுமியை திருமணத்துக்காக விற்பனை செய்த குற்றத்திற்காக குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தை, அவரது கணவர் மற்றும் முகவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது ஹதாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.