10 ரூபாய் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை: புகாரை ஏற்க மறுத்த போலீஸ்?!; பின்னணி என்ன?

 

10 ரூபாய் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை: புகாரை ஏற்க மறுத்த போலீஸ்?!; பின்னணி என்ன?

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

ராமநாதபுரம்:  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

child abuse

ராமநாதபுரத்தை அடுத்த பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த  செய்யது அப்துல் காதர். இவரது வீட்டின் வழியே 7 வயது சிறுமி தினந்தோறும் பள்ளிக்குச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.  அதன்படி சிறுமி  செய்யது அப்துல் காதரின்  வீட்டு வளாகத்தில் பழம் பறித்துள்ளார். இதைக் கண்ட 54 வயதான செய்யது,  சிறுமியிடம் ஆசையாக பேசி, 10 ரூபாய் தருகிறேன் சாப்பிட தின்பண்டம் வாங்கிக்கொள் என்று கூறி வீட்டிற்குள் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. பின்பு அந்த சிறுமிக்கு செய்யது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

arrest

இதையடுத்து வீட்டிற்கு வந்த சிறுமி  இதுகுறித்து தனது பாட்டியிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கீழக்கரை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இருப்பினும் காவல்துறையினர் புகாரை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் தொடர் போராட்டத்திற்குப் பிறகு  செய்யது மீது போக்ஸோ சட்டத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு அவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.