10 கோடி ரூபாய் செலவில் மிக உயரமான சிவலிங்கம்: குவியும் பக்தர்கள்!
Nov 11, 2019, 14:22 IST1573462357000
நிறைவு பெற்று சிவலிங்கம் மக்கள் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக உயரமான சிவலிங்கத்தை வழிபட பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தமிழக – கேரளா எல்லையையொட்டிய செங்கல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு சிவலிங்கம் செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 800 பணியாளர்கள் அங்கேயே தங்கி கட்டுமான பணிகளை செய்து வந்த நிலையில் தற்போது பணிகள் நிறைவு பெற்று சிவலிங்கம் மக்கள் வழிபாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 கோடி ரூபாய் செலவில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவ லிங்கத்தின் 111.2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக உயரமான சிவலிங்கம் என்ற பெருமை பெற்றுள்ள இது இந்தியா புக் ஆப் ரெக்கார்டு மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.