10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 24வரை தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

 

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 24வரை தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

2019-ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் ஜனவரி 24ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

சென்னை: 2019-ஆம் ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் ஜனவரி 24ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுத தேர்வுத்துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிப்பதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் எந்த கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்துக்கு நாளை 23ம் தேதி, மறுநாள் 24ம் தேதிகளில் நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை http://www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம்.

அதேவேலையில் தேர்வுக் கூட அனுமதிச் சீட்டுகள்(ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 
இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவுரைகளின்படி (தேர்வுக் கட்டண விவரம் தவிர்த்து) வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பாடங்கள் வகைப்பாடு அறிந்து அதன்படி விண்ணப்பிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்குத் தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.