புதுகோட்டையில் வீட்டில் பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

 

புதுகோட்டையில் வீட்டில் பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மார்க்கெட் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மார்க்கெட் பகுதியில் விற்பனை செய்வதற்காக ஏராளமான குட்கா, பான்மசாலா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மார்க்கெட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார், திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

புதுகோட்டையில் வீட்டில் பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல் – ஒருவர் கைது!

அப்போது, வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. தொடர்ந்து, சுமார் 20 மூட்டைகளில் இருந்த 1 டன் அளவிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், குட்காவை பதுக்கியது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் தாஜூதீன் என்பவரை பிடித்து, புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு, தாஜுதீன் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.