திருச்சியில் ரூ.1.87 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 2 பேரை பிடித்து விசாரணை

 

திருச்சியில் ரூ.1.87 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 2 பேரை பிடித்து விசாரணை

திருச்சி

துபாயில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்திவரப்பட்ட 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுதொடர்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். துபாயில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த அகமது நபீஸ் மற்றும் திருச்சியை சேர்ந்த ரமீஸ் ரஹமது ஆகியோரது நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

திருச்சியில் ரூ.1.87 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் – 2 பேரை பிடித்து விசாரணை

இதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் தனியே அழைத்துச்சென்று சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் உள்ளாடைக்குள் மறைத்து கடத்திவந்த ஒரு கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 கிலோ 605 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரையும் கைதுசெய்த சுங்கத்துறை அதிகாரிகள், யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தனர் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.