அந்நிய நாட்டு மோகத்தால் அண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை

 

அந்நிய நாட்டு மோகத்தால் அண்ணனை திருமணம் செய்து கொண்ட தங்கை

வெளிநாட்டில் குடியுரிமை பெறுவதற்காக சொந்தத் அண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு பெண் சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

சண்டீகர்: வெளிநாட்டில் குடியுரிமை பெறுவதற்காக சொந்தத் அண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாக ஒரு பெண் சான்றிதழ்களை வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குடியுரிமைக்கான பாஸ்போர்ட் விசாரணையில் சிக்கிக் கொண்ட அண்ணன் தங்கை இருவரும் அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக பஞ்சாப் சார்பதிவாளர் அலுவகத்தில் திருமணம் செய்து கொண்டதாக பதிவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது.

விசாரணையில், அண்ணனுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரக் குடியுரிமை இருக்கிறது. தங்கையையும் ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல நினைத்த அண்ணன், தங்கைக்கும் உடனடியாக குடியுரிமை வாங்கித் தர எண்ணியுள்ளார்.

அதற்காக, தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக ஆவணங்களை இணைத்து உள்ளார். வெளிநாட்டிற்கு செல்ல எண்ணி இந்த அண்ணன் தங்கை நம் சமூக கட்டமைப்பை சிதைக்கும் செயலை செய்துள்ளனர் என போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.