ஹெல்மெட்டுக்குள் வைத்த செல்போன் திடீரென வெடித்தது!

 

ஹெல்மெட்டுக்குள் வைத்த செல்போன் திடீரென வெடித்தது!

ஓசூர் அடுத்த சூளகிரி அருகே  ஹெல்மெட்டுக்குள் வைத்திருந்த செல்போன் வெடித்ததில் இளைஞர் படுகாயமடைந்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி அருகே புளியரிசி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (40) செல்போனில் பேசி கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்றுகொண்டிருக்கும்போது ஆறுமுகத்திற்கு போன் வந்தது. உடனே செபோனை அட்டன் செய்து ஹெல்மெட்டுக்குள் வைத்து பேசியபடி சென்றுள்ளார். அப்போது திடீரென்று செல்போன் வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் அவர் கீழே விழுந்தார். 

சாலையில் சென்றுகொண்டிருந்தவர்கள் ஆறுமுகத்தை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த சூளகிரி காவல்துறையினர் விபத்துக்குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.