ஹிந்தி நடிகைகளுடன் கார்த்தி சிதம்பரம்… அதிர வைக்கும் பாலியல் புகார்..!

 

ஹிந்தி நடிகைகளுடன் கார்த்தி சிதம்பரம்… அதிர வைக்கும் பாலியல் புகார்..!

மும்பை சிறையில் உள்ள இந்திராணி முன்னால் சிதம்பரத்தை நேரில் நிறுத்தி இந்திராணி மூலமாகவே பாலியல் விசயத்தை ஓப்பன் செய்யவைத்து சிதம்பரத்தின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் சூழலை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர் சி.பி.ஐ.அதிகாரிகள்.

ப.சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ மேற்கொண்டுவரும் விசாரணையில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

சட்டவிரோத பணபரிவர்த்தனை,  முறைகேடான அனுமதி, லஞ்சம், சொத்துக்கள் குவிப்பு என எப்படி சுற்றிச்சுற்றி கேள்வி கேட்டாலும் சிதம்பரத்தை மடக்கிட முடியாது என்கிற சூழலுக்கு ஒருகட்டத்தில் தள்ளப்பட்டனர் சிபிஐ அதிகாரிகள்.Indrani

அதனால், சிதம்பரத்தின் மன உறுதியை உடைக்க கடைசியாக பாலியல் அஸ்திரத்தை வீசியிருக்கிறார்கள் அதிகாரிகள். இதில்தான்நொறுங்கிப் போனார் சிதம்பரம்” என்கிறார்கள் விசாரணையை உன்னிப்பாக கவனித்து வரும் டெல்லி பத்திரிகையாளர்கள்.

 “சிதம்பரத்தின் கைதுக்கு அடிப்படை ஆதாரமாக சி.பி.ஐ. காட்டுவது ஐ.என்.எக்ஸ் மீடியாவின் உரிமையாளர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்தான். இது பற்றி சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பிய சி.பி.ஐ., “இந்திராணியை நார்த் ப்ளாக்கில் ஒருமுறையும், ஸ்டார் ஹோட்டலில் ஒருமுறையும் நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். எதற்காக அந்த சந்திப்பு?’ எனகேட்டிருக்கிறார்கள்.P.chidambaram

“அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லை. இந்திராணியார் என்பதே எனக்கு தெரியாதபோது சந்திப்பு எப்படிநடக்கும்?’ என சிதம்பரம் எதிர்க்கேள்வி கேட்டுள்ளார். அதற்கு,”இந்திராணி எங்களிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அதில், எங்களுக்கு தேவையான உதவியை அவர் செய்து கொடுத்ததால் அவருடன் நெருக்கமாக இருந்தேன்’என்றும், சிதம்பரத்தின் மகனோடு பண பேரங்கள் முடிந்த நிலையில், பேரத்தொகை மட்டுமல்லாது ஹிந்தி நடிகைகள் வேண்டும் எனகேட்டதால் 2 நடிகைகளையும் அனுப்பி வைத்தேன் என்றும் வாக்குமூலம் தந்திருப்பதாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவிழ்த்துவிட, இடிந்து போயிருக்கிறார் சிதம்பரம்.

மன ரீதியாக அவர் தளர்ந்து போனதை உணர்ந்த அதிகாரிகள், அவரை அந்த சின்ன அறையில் குறைவான வெளிச்சத்தில் தனிமையில் இருக்க வைத்துவிட்டு வெளியேறிவிட்டனர். கிட்டத்தட்ட 3 மணி நேரம் பேச்சுத் துணையில்லாமல் இருந்தார் சிதம்பரம். இதுபோன்று அடிக்கடி தனிமையில் இருக்க வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அடிக்கடி சோர்வாகி விடுகிறார் சிதம்பரம். அவரது  மனஉறுதியை உடைக்க இப்படி திட்டமிட்டு பாலியல் அட்டாக்குகள் சிதம்பரத்தின் மீது ஏவப்படுகிறது’’என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.Nalini

இதற்கிடையே, மும்பை சிறையில் உள்ள இந்திராணி முன்னால்  சிதம்பரத்தை நேரில் நிறுத்தி இந்திராணி மூலமாகவே பாலியல் விசயத்தை ஓப்பன் செய்யவைத்து சிதம்பரத்தின் நேர்மையை  கேள்விக்குள்ளாக்கும் சூழலை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கின்றனர் சி.பி.ஐ.அதிகாரிகள். அந்த சந்திப்பின்போது பாலிவுட் நடிகைகள் தொடர்பான வில்லங்கத்தையும் சொல்லுமாறு இந்திராணிக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது”என்கின்றன  டெல்லி வட்டாரங்கள்.