ஹவுஸ் கீப்பிங் பெண் ‘கீப்’பானார்-மகன் தீப்பிழம்பானார் -சுற்றிய தாயை வெட்டிய மகன் 

 

ஹவுஸ் கீப்பிங் பெண் ‘கீப்’பானார்-மகன் தீப்பிழம்பானார் -சுற்றிய தாயை வெட்டிய மகன் 

ஒரு தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரியும் 45 வயதான அம்மு, அங்கு பணிபுரியும் கண்ணன் என்பவருடன் கள்ளக்காதலை வளர்த்து கொண்டார். இருவரும் தங்களுக்கு குழந்தைகள் இருப்பதை மறந்து உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். அம்முவுக்கு 23 வயதில் ஒரு மகன் இருப்பதையே மறந்து, தினமும் கண்ணனோடு கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார் .

சென்னை, வில்லிவாக்கத்தில் வியாழக்கிழமை தனது தாய் அம்மு (45), மற்றும் அவரது கள்ளகாதலன் கண்ணன் (43) ஆகியோரைத் தாக்கிய 23 வயது மகன்  உட்பட இருவரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ஒரு தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் ஊழியராக பணிபுரியும் 45 வயதான அம்மு, அங்கு பணிபுரியும் கண்ணன் என்பவருடன் கள்ளக்காதலை வளர்த்து கொண்டார். இருவரும் தங்களுக்கு குழந்தைகள் இருப்பதை மறந்து உல்லாசமாக ஊர் சுற்றி வந்துள்ளனர். அம்முவுக்கு 23 வயதில் ஒரு மகன் இருப்பதையே மறந்து, தினமும் கண்ணனோடு கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்துள்ளார் .இது அவரது மகனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் அக்கம்பக்கத்தினர் அவர்களை பற்றி அசிங்கமாக பேசியதால் மகன் மிக கோபமடைந்தார். மேலும் தன் தாயிடம் இதுபற்றி பலமுறை கூறி கண்டித்துள்ளார் .ஆனால் அம்மு அவரின் பேச்சைக்கேட்காமல் மீண்டும் அவரோடு உல்லாசமாக இருந்துள்ளார்.
அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்த அம்முவின் மகன் கணேஷ் தனது தாயையும் கள்ளகாதலன் கண்ணனையும் வியாழக்கிழமை வில்லிவாக்கத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பிறகு கணேஷ்  அவரது உறவினர் சக்திவேல் இருவரும் சேர்ந்து கொண்டு அந்த  இருவரையும் தாக்கி தப்பி ஓடிவிட்டனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் .