“ஹலோ பிரபா ஒயின்சா !நாங்க பாட்டில மட்டும் எடுத்துட்டு பணத்தை வச்சிட்டு போறோம்  “-வடிவேலு ஸ்டைலில் நடந்த  கொள்ளை..

 

“ஹலோ பிரபா ஒயின்சா !நாங்க பாட்டில மட்டும் எடுத்துட்டு பணத்தை வச்சிட்டு போறோம்  “-வடிவேலு ஸ்டைலில் நடந்த  கொள்ளை..

கர்நாடகாவில் கரிகோபனஹள்ளி என்ற பகுதியில் பிரபாகர் என்பவரின் ஒயின் ஷாப்புக்குள் பிப்ரவரி 28 ன் தேதி இரவு,அந்த கடையின் ஜன்னலை உடைத்து சில குடிகார கொள்ளையர்கள் புகுந்தனர்.

வடிவேலு ஒரு படத்தில் ஒயின் ஷாப்புக்குள் புகுந்து சரக்கடிப்பார்.அதே போல  ஒரு ஒயின் ஷாப்புக்குள் புகுந்த கொள்ளையர்கள் சரக்கை மட்டும் எடுத்துக்கொண்டு பணத்தை தொடாமல் போய் விட்டனர்.  

கர்நாடகாவில் கரிகோபனஹள்ளி என்ற பகுதியில் பிரபாகர் என்பவரின் ஒயின் ஷாப்புக்குள் பிப்ரவரி 28 ன் தேதி இரவு,அந்த கடையின் ஜன்னலை உடைத்து சில குடிகார கொள்ளையர்கள் புகுந்தனர்.அப்போது அவர்கள் அந்த கடைக்குள் இருந்த விலையுயர்ந்த சில சரக்கு பாட்டிலை மட்டும் எடுத்துக்கொண்டு சென்று விட்டனர் .அவற்றின் மதிப்பு 20000 ரூபாய் என ஒயின் ஷாப் உரிமையாளர் பிரபாகர் கூறினார்.ஆனால் சரக்கை எடுத்த கொள்ளையர்கள் அருகிலிருந்த கல்லாப்பெட்டியில் கை வைக்காமல் போய் விட்டனர்.இந்த சம்பவம் திகளாரே பாளையம் மெயின் ரோட்டில் சவுடேஸ்வரி ஒன்ஸ் ஷாப்பில் நடந்துள்ளது. 
இந்த கொள்ளையர்கள் பற்றிய விவரங்களை போலீசார் அங்குள்ள cctv கேமரா மூலம் ஆராய்ந்து விசாரணை செய்து வருகின்றனர் .