‘ஹனிமூன்’ சென்ற இடத்தில் இளம்பெண் திடீர் மரணம்: அதிர்ச்சி தரும் சம்பவம்!?

 

‘ஹனிமூன்’ சென்ற இடத்தில் இளம்பெண் திடீர் மரணம்: அதிர்ச்சி தரும் சம்பவம்!?

இலங்கைக்கு ஹனிமூன் சென்ற இந்திய இளம் பெண், மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கை: இலங்கைக்கு ஹனிமூன் சென்ற இந்திய இளம் பெண், மர்மமான முறையில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

honeymoon

லண்டனைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா, உஷிலா படேல் என்பவரைக்   காதலித்து வந்தார்.  கிளன் வடக்கு லண்டனில் உள்ள பின்ச்லே பகுதியில்  செல்போன் கடை ஒன்றை வைத்திருக்கிறார். நீண்ட நாள் காதலர்களான இவர்கள் கடந்த   ஏப்ரல் 19 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ஆறு நாட்களுக்குப் பிறகு புதுமண தம்பதியினர் இருவரும் இலங்கைக்கு ஹனிமூன் சென்றனர். அங்கு ஐந்து நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்கியதோடு, இதையடுத்து மாலதீவு செல்லவும் திட்டமிட்டிருந்தனர். 

ey

இந்நிலையில் இருவரும் கடந்த 25 ஆம் தேதி திடீர் உடல்நல பாதிப்படைந்தனர். ரத்த வாந்தி மற்றும் காய்ச்சல் காரணமாக உஷிலா படேல்  மரணமடைந்தார். தாங்கள்  சாப்பிட்ட உணவில் கெட்டவாடை வீசியதாக கிளன் குற்றச்சாட்டியுள்ளார். ஆனால்  இதற்கு ஹோட்டல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 
இதைத் தொடர்ந்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் நீர் வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே  உஷிலா இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. 

honeymoon

இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை போலீசார் மறுப்புத் தெரிவித்துள்ளனர் . இது குறித்துப் பேசியுள்ள  கிளன், என் மனைவி இறந்து விட்டாலும் நான் அவருடன் தினமும்  பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். நான் சொல்வதை யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஏனலு எதிராக இந்த ஒட்டுமொத்த உலகமும் செயல்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் கிளன் சந்தாரியா நாடு திரும்ப  இங்கிலாந்து வெளியுறவுத் துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.