ஸ்பைஸ்ஜெட் விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம் – காரணம் இது தான்!

 

ஸ்பைஸ்ஜெட் விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம் – காரணம் இது தான்!

இன்று காலை கொல்கத்தாவில் ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கொல்கத்தா: இன்று காலை கொல்கத்தாவில் ஒரு ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

மும்பையில் இருந்து கவுகாத்திக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்து எரிபொருள் கசிவதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து கொல்கத்தா விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ttn

இதையடுத்து, காலை 9 மணியளவில் கொல்கத்தா விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர். முன்னதாக கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வாரணாசியில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் இதேபோல அவரசரமாக சென்னையில் தரையிறக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.