ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது

 

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது.

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்தது.

கொரோனா பாதிப்பால் உலகில் இதுவரை 95 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மொத்தம் இதுவரை 16 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 3 லட்சத்து 56 ஆயிரம் பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர். சீனாவை காட்டிலும் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. ஸ்பெயின் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியின் எண்ணிக்கைக்கு அருகில் முன்னேறி வருகிறது.

ttn

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 15843-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் இத்தாலிக்கு அடுத்து 2-வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 1051-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் 157,022 பேர் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 55,668 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருக்கின்றனர்.