ஸ்பாட்டில் நடந்த படுபயங்கர சம்பவம்… என்கவுண்டரின் போது நடந்த பின்னணி என்ன..?

 

ஸ்பாட்டில் நடந்த படுபயங்கர சம்பவம்… என்கவுண்டரின் போது நடந்த  பின்னணி என்ன..?

இவ்வளவு கொடூரம் செய்த நீங்கள் தப்பியோட முயல்கிறீர்களா என கோபமான காவல்துறையினர் அந்த 4 பேரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.

தெலங்கானாவில் பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

கடந்த 27ஆம் தேதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் ப்ரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப் பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையின் அடிப்படையில் அவர்கள் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.priyanka reddy

இந்நிலையில் நேற்றிரவு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு 4 பேரையும் அழைத்துச் சென்று, எப்படி கொலை செய்தனர்? என போலீஸார் நடித்துக் காட்டச் செய்துள்ளனர். அந்த நான்கு பேரும் செய்து காட்டிய அழிச்சாட்டியத்தை பார்த்து  மனம் தாங்க முடியாத காவல்துறையினர் கடும் கோபமாகி உள்ளனர். அவர்களின் கோபத்தை உணர்ந்த காமக்கொடூரர்கள் 4 பேரும் தப்பித்து ஓட முயன்றுள்ளனர்.

இவ்வளவு கொடூரம் செய்த நீங்கள் தப்பியோட முயல்கிறீர்களா என கோபமான காவல்துறையினர் அந்த 4 பேரையும் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். ப்ரியங்கா ரெட்டியை எரித்துக்கொன்ற இடத்திலேயே இந்த என்கவுண்டர் நடத்தப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர் இந்த என்கவுன்டரை நடத்தியுள்ளனர்.