ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை: தமிழக மக்களின் உணர்வுகளுக்கான மிக முக்கிய தீர்ப்பு: முத்தரசன் கருத்து!

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை: தமிழக மக்களின் உணர்வுகளுக்கான மிக முக்கிய தீர்ப்பு: முத்தரசன் கருத்து!

ஸ்டெர்லைட் திறக்க தடை விதித்துள்ள  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்குமான மிக முக்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஸ்டெர்லைட் திறக்க தடை விதித்துள்ள  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்குமான மிக முக்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவன கோரிக்கைகையை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேதாந்தா நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.

சுற்றுசூழலை பாதிக்கின்ற, உயிர்வாழ்விற்கு பாதகமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என தமிழக மக்கள் போராடினர். பலர் உயிர்தியாகம் செய்தனர். இதை எத்தனையும் கவனத்தில் கொள்ளாமல் பசுமைத் தீர்ப்பாயமும், வேதாந்தா நிறுவனமும் ஆலையை திறப்பதிலேயே முழு கவனத்தையும் செலுத்திவந்தனர்.

ஆனால் தற்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், சுற்றுசூழல் பாதுகாப்பிற்குமான மிக முக்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது.

ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் புதிய மனுதாக்கல் செய்துள்ளது. இதனையும் நீதிமன்றம் நிராகரித்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், போராடிய அனைவர் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற வேண்டும் என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது’. 

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.